Sunday, June 17, 2012

அஜீத்தின் அடுத்தடுத்த டைரக்டர்ஸ் !


அஜீத்தின் அடுத்தடுத்த டைரக்டர்ஸ் !



அஜீத் இப்போது  விஷ்ணுவர்தன், 'சிறுத்தை' சிவா ஆகியோரது இயக்கத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார்.

விஷ்ணுவர்தன் படம் ஜுன் மாதம் துவங்க இருக்கிறது. அதற்குள் 'சிறுத்தை' சிவா படத்தினைப் பற்றிய தகவல்கள் வெளிவர தொடங்கி இருக்கின்றன.

'சிறுத்தை' என்கிற படத்தின் மூலம் கார்த்தியை விநியோகஸ்தர்கள் மத்தியில் வரவேற்புக்குள்ளாக்கியர் சிவா. படத்தின் வசூல் மழையால் தமிழ் திரையுலகில் 'சிறுத்தை' சிவா என்ற அடைமொழியோடு அழைக்க தொடங்கினார்கள். (அப்படம் 'விக்ரமாக்குடு' என்ற தெலுங்கு படத்தின் ரீமேக் என்பது தனிக்கதை)

தற்போது ரவிதேஜா, டாப்ஸி ஜோடியில் 'தருவு' என்னும் படத்தினை இயக்கினார். பவன் கல்யாண் நடிப்பில் வெளிவந்த 'கபார் சிங்' படம் வெளிவந்து சில நாட்கள் கழித்து வெளிவந்தது 'தருவு'. எனினும்  'கபார் சிங்' தெறித்துக் கொண்டு ஓட, 'தருவு' தவழ்ந்து கொண்டு தான் இருக்கிறது.

அதற்குள் தமிழ் திரையுலகில் 'தருவு' படத்தின் ரீமேக்கில் தான் அஜீத் நடிக்க இருக்கிறார் என்றும், 'தருவு' தெலுங்கு பாக்ஸ் ஆபிஸில் சுருண்டதால் அஜீத் இவரது இயக்கத்தில் நடிக்க போவது இல்லை என்று செய்திகள் உலா வந்தன.

அச்செய்திகள் அனைத்தையும் மறுத்து இருக்கிறார் சிவா. அஜீத் நடிக்க இருக்கும் படத்தின் கதை வேறாம்." 'தருவு' படத்திற்கும் இப்படத்திற்கும்  எவ்வித சம்பந்தமும் இல்லை. விஷ்ணுவர்தன் படம் முடிவடைந்தவுடன் எனது படத்தில் அஜீத் நடிப்பது உறுதி" என்று தெரிவித்து இருக்கிறார்.

இப்படத்தில் அஜீத்திற்கு ஜோடியாக நடிக்க அனுஷ்காவிடம் பேசி வருகிறாராம் சிவா.

No comments:

Post a Comment